Skip to main content

Testing Treatments: Better Research for Better Healthcare - புத்தக அறிமுகம் தமிழில்.

சமீபகாலமாக ஆங்கிலத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த புத்தகங்களை படித்து வருகிறேன்.
அப்படி படித்த புத்தங்களில்"Testing Treatments: Better Research for Better Healthcare" என்ற புத்தகத்தை பற்றி பார்ப்போம்.
இந்த புத்தகத்தில் மருத்துவ ஆராய்ச்சியில் நடந்த தவறுகள் அதனால் நிகழ்ந்த இழப்புகள். மருத்துவ ஆராய்ச்சி எப்படி நடத்த வேண்டும் என பல தரப்பட்ட தரவுகள் உடைய புத்தகம்
மருத்துவ நிறுவனங்கள் அவர்களின் லாபநோக்கத்தில் ஆராய்ச்சி செய்து வணிகத்தை தொடங்குதல் போன்ற பல நிகழ்வுகளை அடக்கி இருக்கின்றன .
குறிப்பாக மருத்துவ துறையில் நடக்கும் ஆய்வுகளில் பிண்ணனி அதன் பின் இருக்கும் அரசியல் மற்றும் பல விடயங்களை இந்த புத்தகத்தை படிப்பதின் மூலம் நாம் அறியலாம்.
மருத்துவத்துறையில் நடந்த சார்ப்பு (bias) நிலை ஆய்வுகளின் அரசியல் மற்றும் விளைவுகளை பல தரவுகளுடன் இந்த புத்தகம் மேற்கொள்காட்டுகின்றன.
மருத்துவம் மற்றும் மருத்துவ சார்ந்த துறையில் ஆராய்ச்சி செய்ய விரும்புவர்கள். மருத்துவ ஆராயச்சிகளின் பிண்னணியை புரிந்து கொள்ள நினைப்பவர்கள் படிக்க பரிந்துரைக்கின்றேன்.
இந்த இணையம் பெருகிய காலத்தில் youtube இல் வாய்க்கு வந்த மருத்துவ முறைகளை சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அவர்கள் கூறும் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு சரியான ஆய்வுகள் இருக்கிறதா என்று கேட்டால் தரவுகள் எதுவும் இல்லை! இதனை ஆங்கிலத்தில் ஆய்வுகள் அற்ற மருத்துவ முறை (அ) போலி மருத்துவ முறை என கூறுவார்கள்.
அதனால் எந்த ஒரு மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறையை மற்றும் பரிசோதனையை மருத்துவத்துறையை சாராத ஒருவர் கூறினால் அதன் பின் இருக்கும் ஆய்வுகள் மற்றும் அந்த சிகிச்சையினால் நடந்த ஆய்வுகள் என்ன கூறுகின்றன என நீங்கள் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கின்றன.

நவின் ஆர் குமார்
10/10/2023

Comments

Popular posts from this blog

புதிய தொடர் தொடக்கம்

அன்பு நண்பர்களே, வரும் ஜனவரி 1 2025 முதல் நரம்பியல் நோய்கள் குறித்த அறிமுக தொடர் எனது blog ல் எழுத உள்ளேன். தொடர் குறித்த அறிமுகம் மற்றும் இதர தகவல்கள்   அன்று ஜனவரி  1 2025 அன்று blog யில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. ஆர். நவின் குமார் 25/12/24 Blogspot Link Click Here

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில் அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்? முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் ...