Skip to main content

இணைய மாயை -1



இணையத்தில் பதில்களைத் தேடுவதன் மூலம் நம்முள் ஒரு மாயை உருவாகிறது.இது வெளிப்புற அறிவுடன்(out source) நம் சுயசிந்தனையை இணைக்கிறது.
ஒரு எளிய இணையத் தேடுதலில் நமது கேள்விகளுக்கான பதில்களை மீட்டெடுக்கக் GOOGLEளைப் பயன்படுத்திய பிறகு ஏதோ நாமே சொந்த முயற்சியில் கேள்விக்கான பதிலைக் கூறினோம் அல்லது கண்டடைந்தோம் என்ற அதீக நம்பிக்கை எழுகிறது.ஒரு வகையில் இந்த போக்கு எளிமையாக தென்பட்டாலும் அவற்றுள் உள்ளார்ந்த ஆபத்து என்ன என்பதையும் நாம் உணரவேண்டும்.இது நம்முடைய அறியாமையின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
      art by : arjun bro


இத்தகைய இணைய மாயையை நாம் நிறையக் காண்பதுண்டு.அந்த மாயை மக்கள் மனதில் அதிகமாக பரவி இருக்கிறது.பல கேள்விகளுக்குப் பதிலை இணையத்தில் தேடும் போது ,பல தரப்பட்ட பதில்கள் வரும்.அதில் எது சிறந்தது என மக்கள் சிந்திப்பதில்லை.வருகின்ற பதிலில் எது அவர்களுக்குப் பொருத்தமாக இருக்கிறதோ.அதை வைத்துக் கொண்டு,தங்களுக்குள் ஒரு விதமாக மாயை  ஏற்படுத்தி கொள்கிறார்கள்.தாங்கள் தான் அறிவாளி என்ற எண்ணத்தில் அதீத நம்பிக்கையில் பல பேர் இருக்கிறார்கள்.இது நம் சுயசிந்தனை ,சுய அறிவை அழித்துவிடும் என்பதை அவர்கள் அறிவதில்லை.
இந்த மாயை நம்மை ஒத்த எண்ணக் கருத்துடையவர்களாக மாற்றக் கூடும்.அது நமக்கு ஒரு பெரிய நம்பிக்கை தரக் கூடிய விசயம் என்று கருதினாலும்.அது ஒரு வகையில் நம் அறியாமையின் வெளிப்பாடு ஆகும்.ஒரு அறிவாற்றலின் சார்பு ஆகும், இதன் மூலம் எதையாவது திறமையற்றவர்கள் தங்களின் திறமையற்ற தன்மையை அடையாளம் காண முடியாது. இதனை உளவியலில் "Dunning-Kruger Effect" என்று கூறுவார்கள்.Dunning-Kruger Effect என்றால் அவர்கள் திறமையின்மையை அங்கீகரிக்கத் தவறியது மட்டுமல்லாமல், அவர்கள் உண்மையில் திறமையானவர்கள் என்ற நம்பிக்கையையும் அவர்கள் உணரக்கூடும்.


இன்றைய  தொழில்நுட்பம் தகவல்களை நமக்கு எளிதில் கிடைக்கக்கூடியதாக மாறி இருக்கிறது. இது  தேடலின் தீவிரத்தை நம்மிடம் அதிகப்படுத்தி  நம்முடைய  "சுய அறிவு" மிகவும் பாதிப்புக்குள்ளாக்கவும்செய்கிறது.அது ஒருவரைச் சார்ந்துள்ள போக்கை நம்முள் ஏற்படுத்தும்.இது தொடர்ந்தால் மனதில் பல சிக்கல்கள் உண்டாக்கும்.இதனால்  மக்கள் தங்கள் திறனை அடையத் தவறிவிடுகிறார்கள், ஏனெனில் நமது ஆற்றலும் பெரிய அளவில் சுருங்கி விடுகிறது.அறிவின் இந்த மாயை இணையத்தைத் தவிர வேறு பல தரப்பைச் சார்ந்தும் காணப்படலாம்.

நமது மனம் இணையத்தை ஒரு கூட்டாளியாகக் கருதி,அதனைச் சார்ந்து தொடர்கிறது.அது நாம் எப்படி வெளிப்புற அறிவை நம்பி இருக்கிறோம் என்பதனை ஒரு மாயையாகக் காட்டுகிறது.
இதற்கு முந்தைய காலத்தில் மக்கள் பல கோணங்களில் தகவல்களை அறிந்தார்கள். புத்தகம்,அந்த துறை சார்ந்த வல்லுநர்களின் பேச்சு,நண்பர்களுடன் உரையாடுவதின் மூலம் அறிந்து தெளிவு அடைந்தார்கள்.இப்போது,இணையம் நம்மை வழிநடத்திச் செல்வதால்,இணையத்தில் வழியே வரும் வெளிப்புற அறிவை மட்டுமே நம்பி .தங்களின் அறியாமை காட்டுகிறார்கள். எனவே,
இணைய மாயத்திலிருந்து நாம் வெளியே வர,நல்ல விவாதங்களும்,அறிவார்ந்த தெளிந்த தேடலும் மிகவும் அவசியம். இணையத்தில் தேடுவது எல்லாம் உண்மை அல்ல. உயர்தர அய்வுகள் சார்ந்த தேடல்ககளும் தரவுகளும் பார்த்து தேட வேண்டும்
குறிப்பாக மருத்துவ துறை தேடல்களில் google சார்ந்த தேடல்களும் google சொல்லும் சில இணையதளங்களை நம்பியே ஓர் கூட்டம் இருக்கிறது.

நவின் ஆர் குமார்
17/09/2023

Comments

Popular posts from this blog

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...

நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர்

வணக்கம். நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர் வரும் திங்கட்கிழமையிலிருந்து (06/01/2025) வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் வாரங்களில் திங்கட்கிழமை அன்று கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கும். இந்த தொடர் எழுத வேண்டும் என்ற முடிவு சென்ற வாரம் தான் தோன்றியது. எழுத போகிறேன் என்ற அறிவிப்பை 25/12/2024 அன்று எனது வலைப்பதிவில் (Blog) பதிவு  செய்தேன். அன்று முதல் இத்தொடர் நன்றாக வர வேண்டும் என்று தொடர்ந்து உழைத்து கொண்டு வருகிறேன். எல்லா வல்ல இறைவனின் அருளால் சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த தொடர் எழுத காரணம் இணையம் விரிவிடைந்து எல்லாம் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் உலகில், போலி அறிவியலின் தாக்கமும் இதை செய்தால் இந்த நோய் குணமாகும், இந்தப் பயிற்சி மேற்கொண்டால் இது குணமாகும் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டும் எழுதி கொண்டும் இருக்கிறார்கள். மேலும் நரம்பியில் நோய்கள் குறித்தச் சமகால ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் தமிழில் பெரிய அளவில் இல்லை. இதனை எல்லாம் எண்ணத்தில் கொண்டு இந்த தொடரை எழுத தொடங்குகிறேன். இது எல்லா வாரம் திங்கள்கிழமையில்...

மோட்டர் நியூரான் நோய் (MND)

மோட்டர் நியூரான் நோய் என்பது மூளை மற்றும் முதுகு தண்டிலில் உள்ள நரம்பு செல்களை பாதிக்கிறது. இது மெதுவாக மூளை மற்றும் முதுகு தண்டில் உள்ள நரம்பு செல்களை அழிக்க தொடங்கும். இதன் பாதிப்பு மெதுவாகத் தொடங்கி சில காலங்களில் மோசம் அடையும். முக்கியமாக, இது மோட்டார் செல்களை அழித்து உடல் இயக்கத்தை பாதிக்கும். இந்த நோயினால் மூளையில் உள்ள மேல்நிலை மோட்டார் நரம்புகள் (Upper Motor Neurons) மற்றும் முதுகெலும்பில் உள்ள கீழ்நிலை மோட்டார் நரம்புகள் (Lower Motor Neurons) செயலிழக்கின்றன. இந்த நோயின் தாக்கம் இரண்டு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். 1) கைகள் மற்றும் கால்களில் இருந்து பாதிப்பு தொடங்கும் 2) முகம், வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் இருந்து பாதிப்பு தொடங்கும் இதன் முதன்மையான அறிகுறிகள் தசைகள் மெலிவது, தசைகள் துடிப்பு, தசைகள் பலவினம், சுவாச பிரச்சனை, நடக்க சிரமம் மற்றும் உடல் இயக்கம், செயலிழப்பு. நோயின் அறிகுறிகள் தெரிந்தவுடன் சிகிச்சை ஆரம்பித்தால் நோயின் தாக்கத்தை குறைத்து வாழ்கை தரத்தை நீட்டிக்க முடியும். வகைகள்: நோயின் பாதிப்பு ஏற்படும் இடத்தை வைத்து  1)ஆமியோட்ரோபிக் லா...