Skip to main content

நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர்

வணக்கம்.
நரம்பியல் நோய்கள் அறிமுகத் தொடர் வரும் திங்கட்கிழமையிலிருந்து (06/01/2025) வெளிவரும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து வரும் வாரங்களில் திங்கட்கிழமை அன்று கட்டுரைகள் வந்த வண்ணம் இருக்கும்.
இந்த தொடர் எழுத வேண்டும் என்ற முடிவு சென்ற வாரம் தான் தோன்றியது. எழுத போகிறேன் என்ற அறிவிப்பை 25/12/2024 அன்று எனது வலைப்பதிவில் (Blog) பதிவு
 செய்தேன். அன்று முதல் இத்தொடர் நன்றாக வர வேண்டும் என்று தொடர்ந்து உழைத்து கொண்டு வருகிறேன். எல்லா வல்ல இறைவனின் அருளால் சிறப்பாக வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

இந்த தொடர் எழுத காரணம் இணையம் விரிவிடைந்து எல்லாம் உட்கார்ந்த இடத்தில் கிடைக்கும் உலகில், போலி அறிவியலின் தாக்கமும் இதை செய்தால் இந்த நோய் குணமாகும், இந்தப் பயிற்சி மேற்கொண்டால் இது குணமாகும் என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டும் எழுதி கொண்டும் இருக்கிறார்கள். மேலும் நரம்பியில் நோய்கள் குறித்தச் சமகால ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் தமிழில் பெரிய அளவில் இல்லை. இதனை எல்லாம் எண்ணத்தில் கொண்டு இந்த தொடரை எழுத தொடங்குகிறேன். இது எல்லா வாரம் திங்கள்கிழமையில் வெளியாகும் மற்றும் மாதம் இரண்டு முறை போலி அறிவியல் முறைகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கட்டுரைகள் இடை இடையே வெளியாகும்.

தங்கள் ஆதரவினை எதிர்நோக்கி இப்புதிய தொடரின் முதல் கட்டுரை 06/01/2025 அன்று வெளியாகும் என்பதை மீண்டும் மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.


நவின் ஆர் குமார்
03/01/2025

Comments

Popular posts from this blog

புதிய தொடர் தொடக்கம்

அன்பு நண்பர்களே, வரும் ஜனவரி 1 2025 முதல் நரம்பியல் நோய்கள் குறித்த அறிமுக தொடர் எனது blog ல் எழுத உள்ளேன். தொடர் குறித்த அறிமுகம் மற்றும் இதர தகவல்கள்   அன்று ஜனவரி  1 2025 அன்று blog யில் வெளியாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. ஆர். நவின் குமார் 25/12/24 Blogspot Link Click Here

பார்கின்சன் நோய் பாகம் -1

மூளை தான் மனிதனின் அனைத்து செயல்பாட்டையும் தீர்மானிக்கின்றது. அனைத்து உறுப்புகளுக்கும் செய்தி அனுப்பிச் செயல்பட வைக்கிறது. அதில் நரம்பு மண்டலம் தான் முக்கியமான செயலினை ஆற்றுகிறது இதில் ஏதேனும் பிரச்சினை வந்தால் மனிதனின் உடல் இயக்க செயல்பாடுகள் பாதிக்கப்படுகிறது. நோய் குறித்த அறிமுகம் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன் நோய் மத்திய நரம்பு மண்டலத்தில் இருக்கும் டோபமைன் எனப்படும் மூலக் கூறு சுரப்புக் குறைவால்  மனிதனின் அன்றாட இயக்க செயல்பாடுகள் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. டோபமைனின் முக்கியச் செயல்பாடு உடல் இயக்க செயல்பாடுகளை ஒருங்கிணைக்க உதவுகிறது. மேலும், இது மனதிற்கு மகிழ்ச்சி மற்றும் ஊக்கத்தினை வழங்கும் முக்கியக் காரணியாக செயல்படுகிறது. நோயின் உயிர்க் கூறியல்: நோயின் மூல குறியீடாக டோபமைன்  உள்ளது இதனின் சுரக்கும் தன்மை குறையும் போது தான் பார்கின்சன் நோயின் அறிகுறிகள் வர ஆரம்பிக்கின்றன. டோபமைன் மூளையில் சப்ஸ்டான் ஷியா நெக்ரா, வென்ட்ரல் டெக்மென்டல் ஏரியா மற்றும் இப்போகலமஸ் பகுதிகளில் சுரக்கும். டோபமைன் நரம்பு செல்களின் குமிழிகளில் சேமிக்கப்படுகிறது. நரம்பு செல்கள் இயக...

இணைய மாயை -2

பலருக்கு இணையத்தில் எந்தவொரு சம்பவங்களுக்கும் கருத்து தெரிவிக்க வேண்டும் இல்லையெனில் அவர்களை சமூகத்தில் இருந்து வெளிநபராக கருதுவார்கள் என்ற நினைப்பில் பலர் வாழுகின்றனர். அதற்கு சமீபமாக பல சம்பவங்களை கூறலாம். அதில் முதலாவதாக வருவது மனம் மற்றும் உள நல அலோசக பெருமக்கள். தொலை தூர கல்வியில் உளவியல் சார்ந்த ஏதோ ஒரு மூன்று மாத கால பயிற்சி அல்லது உளவியல் சார்ந்த சான்றிதழ் வைத்து கொண்டு தாங்கள் பெரிய மன நல அலோசகர் என்ற பெயரில் உலா வருகின்றனர். பல youtube சேனல்கள், செய்தி தாள்களில் கட்டுரைகள், தொலைகாட்சிகளின் பங்களிப்பு என பல வழிகளில் செயல்படுகின்றனர். சமீபத்தில் குமுதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை படித்தேன் "அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!" என்ற தலைப்பில் அதில் கூறப்பட்டுள்ளது சில விஷயங்கள் பின் வருமாறு மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்? முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்து கொள்ள முடியும். எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் ...